News

Sunday, 16 May 2021 08:15 AM , by: Daisy Rose Mary

வரும் மே 26ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கம் முடிவுசெய்துள்ளது. 

6 மாதங்கள் நிறைவு

மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் 2020, நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தின, இருப்பினும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுப்பதால் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

மே 26ம் தேதி கருப்பு தினம்

இந்நிலையில், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஆறு மாதங்கள் நிறைவடைவதை முன்னிட்டு வரும் 26-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, விவசாய சங்கங்களின் தலைமை அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் பல்பீர் சிங் ரஜவல் கூறியுள்ளதாவது, வரும் 26-ம் தேதியுடன் எங்கள் போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவுபெறுகிறது. இதனை குறிக்கும் வகையிலும், பிரதமராக பதவியேற்று அன்றுடன் ஏழு ஆண்டுகள் முடிவடைவதையொட்டியும் வரும் மே 26-ம் தேதி, கருப்பு தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டம் தொடரும்

அன்றைய தினம் நாடு முழுதும் உள்ள மக்கள், தங்கள் வீடு, கடை, வாகனங்களில் கறுப்புக்கொடி ஏற்றி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறாத வரை எங்களது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)