மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 August, 2020 7:23 PM IST

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, SBI - ATM இனி உங்கள் வீடு தேடி வரும்.

வீடு தேடி வரும் ATM

கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்கவும் SBI- வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் வாட்ஸ்-அப் Whats app மூலமாகவோ ஒரு மெசேஜ் செய்தாலோ அல்லது போன் செய்தாலோ இந்த Mobile ATM உங்கள் வீடு தேடி வரும் என்ற அறிவிப்பை எஸ்பிஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் அஜய் குமார் அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தற்போது முதற்கட்டமாக லக்னோவில் மட்டும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் வீட்டிற்கே ஏடிஎம் சேவைகள் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

Mobile-ATM சிறப்பம்சங்கள்

இந்த வீடு தேடி வரும் ATM- மூலம் பணப்பரிமாற்றம், பண விநியோகம், காசோலை எடுப்பது, காசோலை கோரிக்கை சீட்டு எடுப்பது, படிவம் 15H எடுப்பது, வரைவுகளை வழங்குவது, கால வைப்பு ஆலோசனைகளை வழங்குவது, ஆயுள் சான்றிதழ் எடுப்பது மற்றும் KYC ஆவணங்கள் எடுப்பது ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த வசதி தற்போது மூத்த குடிமக்களுக்கு, சிறப்பு திறன் கொண்டவர்களுக்கு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SBI-வங்கி புதிய விதிமுறைகள்

SBI கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ATM-களுக்கான விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, மெட்ரோ நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் 8 முறை இலவசமாக ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம். இவர்கள் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 3 முறை மற்ற ஏடிஎம்களிலும் பணத்தினை எடுத்துக் கொள்ளலாம்.

மெட்ரோ அல்லாத நகரங்களில் 10 முறை இலவசமாக பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இதில் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 5 முறை மற்ற ஏடிஎம்களிலும் பணத்தினை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் படிக்க..

ரேஷன் கார்டு இல்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்குவது எப்படி? விபரம் உள்ளே!

மீன் வளர்போருக்கு மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!

தென்னந்தோப்பில் மீன் குட்டை அமைப்பவர்களுக்கு ரூ.25000 வரை மானியம்!!

மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு !!

 

English Summary: SBI ATM at your doorstep now just call or WhatsApp to get cash
Published on: 24 August 2020, 07:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now