News

Thursday, 24 November 2022 08:10 PM , by: T. Vigneshwaran

Scholarship

இரண்டு லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தேனி மாவட்ட ஆட்சியர்முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி,ஐ.ஐ.எம்.ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

ஒரு மாணவருக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்கும் மாணவ, மாணவிகள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பங்களை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வருகிற ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

கல்வி உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?

3 நாட்கள் முட்டை, பிஸ்கட் - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)