மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 April, 2023 1:55 PM IST

பல இடங்களில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸை மீறியதைத் தொடர்ந்து ஓடிசா மாநிலம் முழுவதும் 10 வகுப்பு வரை அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை ஏப்ரல் 16 வரை மூடுவதாக ஒடிசா அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

 

ஜப்பானில் இருந்து மாநிலத்திற்கு திரும்ப வந்த முதல்வர் நவீன் பட்நாயக், வெப்ப அலை நிலையை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பத்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை வரை மூட உத்தரவிட்டார்.

பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் எரிசக்தி துறைகள் முழுமையாக தயாராக இருக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சிறப்பு கவனம் செலுத்தி நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சீரான குடிநீர் விநியோகம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஏழு இடங்களில் அதிகபட்ச நாள் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால், அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ளது. இச்சமயத்தில் மின் வெட்டு ஏற்படாமல் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்யவும் நவீன் எரிசக்தி துறைக்கு உத்தரவிட்டார்.

ஏப்ரல் 13 முதல் 15 வரை வடக்கு, மேற்கு மற்றும் மத்திய ஒடிசா மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். IMD இன் படி, பரிபாடா பகுதியில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது, அதைத் தொடர்ந்து ஜார்சுகுடா 41.2 டிகிரி மற்றும் சம்பல்பூர் 40.8 டிகிரி, புவனேஸ்வரில் 40.7 டிகிரி செல்சியஸைத் தொட்டது. பௌத், திட்லாகர், அங்குல், கட்டாக் மற்றும் சுந்தர்கர் ஆகிய இடங்களிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வடமேற்கு மற்றும் மேற்கு வறண்ட காற்று மற்றும் அதிக சூரிய ஒளியின் ஓட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அடுத்த நான்கு நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று முதல் நான்கு டிகிரி வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். சுந்தர்கர், கியோஞ்சர், மயூர்பஞ்ச், பாலசோர், ஜார்சுகுடா, சம்பல்பூர், அங்குல், பௌத் மற்றும் தியோகர் ஆகிய இடங்களில் ஏப்ரல் 13 முதல் 15 வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று தேசிய வானிலை முன்னறிவிப்பாளர் தெரிவித்துள்ளார். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐஐடி புவனேஸ்வரில் உள்ள பூமி, கடல் மற்றும் காலநிலை அறிவியல் பள்ளியின் இணை பேராசிரியர் சந்தீப் பட்நாயக் கூறுகையில், வடமேற்கில் இருந்து பாயும் சூடான காற்று ஒடிசா கடற்கரைக்கு அருகில் திரும்புகிறது மற்றும் கடலில் இருந்து பாயும் ஈரமான காற்றுடன் தொடர்பு கொள்கிறது.

இது புவனேஸ்வரில் வெளிப்படையான வெப்பநிலை தாக்கத்தை உண்டு பண்ணுகிறது மற்றும் அதிக வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. புவனேஸ்வர் தவிர, கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இதுபோன்ற நிலை அடுத்த சில நாட்களுக்கு நிலவும்” என்றார்.

English Summary: schools, anganwadis shut till Sunday due to heatwave says odisha CM
Published on: 12 April 2023, 01:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now