மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 October, 2021 3:30 PM IST

தமிழகத்தில்  1ம் முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பதற்கானப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக 1ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுடன் பெற்றோரும், வகுப்பறையில் அமர இருக்கைகள் தயார் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

மன அழுத்தம் (mental stress)

ஓராண்டிற்கு மேலாக மாணவர்கள் வீட்டிலேயே இருப்பதால் அவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படுவதோடு ஒருவித மன அழுத்தத்திற்கு அவர்கள் ஆளாகி இருப்பதாக பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு (Opening of schools)

இதனைக்கருத்தில் கொண்டு வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்ட நிலையில், பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

20 மாணவர்கள் மட்டுமே(20 students only)

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதி, முகக் கவசம் கட்டாயம், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோருக்கும் இருக்கை (Seat for parents)

அத்துடன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் பள்ளியில் பெற்றோர்களும் இருக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் (Mask)

குழந்தைகளால் முக கவசம் அணிந்து கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியாது. அதே போல் அவர்களுக்கு முக கவசம் எப்படி அணியவேண்டும் என்பதும் தெரியாது. இந்த சூழ்நிலையில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசிச் செலுத்தி கொண்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து வகுப்பில் அமரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!

கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!

English Summary: Schools open- Parents arrange to sit in the classroom with squirrels!
Published on: 08 October 2021, 03:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now