மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 September, 2021 5:46 PM IST
Schools Reopening In TamilNadu

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீண்டும் மூடுவதற்கு கோரிக்கைகள் எழுகின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் செப்டம்பர் 1க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுத்தியது மேலும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்பட்டுள்ள நிலையில் அரியலூரில் இரண்டே நாட்களில் இரண்டு பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்ச கணக்கான மாணவி, மாணவிகள் பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வந்தாலும் ஓரிரு மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் காரணத்தால் அது பூதாகாரமாகிவிடும் என்பதால் மீண்டும் பள்ளிகளை மூட அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுமோ என்ற சூழல்தான் தற்போது நிலவுகிறது. ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்படுவதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் இருப்பதால் அடுத்த விசாரணையில் மாணவிகளின் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கலாம் என்பதிலும் எந்த அச்சயமும் இல்லை.

அரியலூரில் மட்டுமல்ல, கடலூரில் ஆசிரியர் ஒருவருக்கும், நாமக்கல்லில் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதால். உடனே, அப்பள்ளிகளில் உள்ள மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா சோதனை செய்ததில் தொற்று இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையிலும், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு நாட்களில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 30% மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை என்று மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் அரசும், பள்ளி நிர்வாகமும் இதனை எப்படி கையாள போகிறார்கள் என்பதிலே தொடர்ந்து பள்ளிகள் இயங்க முடியும்.

மேலும் படிக்க:

ஒரே நாளில் குறைந்த தங்கம் விலை! தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு!

கொரோனாவை ஒழிக்க 2 Dose கட்டாயம்- மத்திய அரசு அறிவிப்பு!

English Summary: Schools reopen at open speed in Tamil Nadu?
Published on: 03 September 2021, 05:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now