மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 August, 2021 12:01 PM IST
Credit: The Hindu

தமிழகத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தாக்கம் (Corona impact)

கடந்த 2019ம் ஆண்டு உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா முதல் அலை, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தைக் கடுமையாகத் தாக்கியது.

பள்ளிகள் மூடல் (Closing of schools)

இதன் காரணமாக, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு மேல் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

ஆன்லைனில் வகுப்புகள் (Classes online)

எனினும், மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். ஆனால் பள்ளிகள் திறக்கப்படாததால், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மன அழுத்தத்தில் இருந்து வருகிறார்கள். நேரடி வகுப்பு நடைபெறாததால் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-அலை தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில், பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகளைத் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறைத் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, கொரோனாத் தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு (Opening of schools)

இதன் அடிப்படையில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு அழைத்து நேரடி வகுப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி- கல்வித்துறை செய்து வருகிறது.

இணைப்புப் பயிற்சி (Link training)

16 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு தொடக்கத்திலேயே பாடத்திட்டங்களை நடத்த வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக அடிப்படை இணைப்பு பயிற்சி நடத்த வேண்டும் என்று பள்ளி- கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
சிறு வினாக்கள், ஒருவரி வார்த்தைகள் போன்ற எளிய நடைமுறையில் பாடங்களை 3 வாரங்களுக்கு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு பயிற்சிக்கான செயல்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. பள்ளி வேலை நாட்கள் மூன்றில் ஒன்றாக இதற்காக குறைக்கப்பட்டுள்ளது. 50 சதவீத மாணவர்கள் வகுப்புக்கு வருவதால் 40 நாட்கள் அடிப்படை பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடிப்படையான பயிற்சி (Basic training)

இதுகுறித்து பள்ளி ஆசிரியர் இளமாறன் கூறியதாவது:-

மாணவர்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால் அவர்களுக்கு அடிப்படையான பயிற்சி வழங்கினால் ஆர்வத்தோடு வகுப்புகளை கவனிப்பார்கள். எடுத்த உடனேயே பாடத்திட்டத்தை நடத்தினால் அவர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை.

ஆசிரியர் கருத்து (Teacher comment)

அதனால் முந்தைய வகுப்பு பாடங்களை நினைவுபடுத்தி படிப்படியாக புதிய பாடத்திற்குள் கொண்டு வருவது எளிதாக இருக்கும். சிரமங்கள் இல்லாமல் மாணவர்கள் படிக்க ஆர்வம் ஏற்படக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

English Summary: Schools to open in Tamil Nadu on September 1 - 9th to 12th classes in the first phase!
Published on: 16 August 2021, 11:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now