நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 July, 2022 8:52 PM IST
Sea Cucumber seized

கடலில் கிடைக்கும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று தான் கடல் அட்டைகள். இவற்றை பிடிக்கவும், விற்பனை செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடல் அட்டைகளில், அரிய மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் சர்வதேச சந்தைகளில் நல்ல விலை உண்டு. உலகம் முழுவதும் கடல் அட்டைகளுக்கு, நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

கடல் அட்டைகள் (Sea Cucumber)

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி அருகில், இருமேனி பகுதியில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது‌. கடல் அட்டைகளை கடத்துவது சட்ட விரோதம் எனத் தெரிந்தும், சிலர் பணத்திற்காக இச்செயலை செய்கின்றனர். கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசு கடல் அட்டைகளை கடத்துவதற்கு தடை விதித்துள்ளது‌. இருப்பினும் இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.

வனத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட கடல் அட்டைகளை அடையாளம் கண்டு, ஆட்டோவை வனத்துறையினர் மடக்கினர். பிறகு, ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 450 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றி, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஒரு கடத்தல் சம்பவம், இதே இராமநாதபுரத்தில் கடந்த மே மாதம் நிகழ்ந்துள்ளது‌. பட்டனம் காத்தான் பகுதியில், காவல் துறையினர் ரோந்துப் பணியில் இருந்த போது இச்சம்பவம் நடந்தது. அப்போது, சுமார் 200 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரை கைது செய்தனர்.

கடல் அட்டைகளை கடத்தும் சம்பவம் அடிக்கடி அரங்கேறுவதால், வனத்துறையும், காவல் துறையும் இது சார்ந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

வேளாண் கழிவுகளில் இருந்து பயோ எத்தனால்: சென்னை ஐஐடி கண்டுபிப்பு!

குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்: இணையத்தில் வைரல்!

English Summary: Sea Cucumber tried to be smuggled to Sri Lanka: Forest Department seized
Published on: 11 July 2022, 08:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now