நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 April, 2022 10:47 PM IST
Sea Wind Power Station

கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராய, இராமநாதபுரத்தில் உள்ள தனுஷ்கோடியில், 350 கோடி ரூபாயில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது என, தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குநர் பலராமன் கண்ணன் தெரிவித்தார்.

காற்றாலைகள் (Wind Mills)

இந்திய காற்றாலைகள் டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் துள்சி தந்தி, செயலர் கிரி ஆகியோர் கூறியதாவது: காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. காற்றாலைகள் டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்கம், மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை ஆதரவுடன், டில்லியில் இம்மாதம் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை, 'விண்டெர்ஜி' என்ற காற்றாலை மின்சாரம் தொடர்பான சர்வதேச மாநாடு நடத்துகிறது.

இதன் வாயிலாக காற்றாலை துறையில் உலக முதலீட்டை இந்தியா பெறும்.இவ்வாறு அவர் கூறினார். தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குநர் பலராமன் கண்ணன் கூறியதாவது: தமிழகம், குஜராத்தில் கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. மத்திய மின் துறை, இரு மாநிலங்களில் உள்ள கடலில், 2030க்குள் 30 ஆயிரம் மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்காக தனுஷ்கோடியில், 350 கோடி ரூபாயில் ஆய்வு அமையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்திற்கு, 75 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது. அங்குள்ள கடலில் தலா, 8 மெகா வாட் திறனில் இரு காற்றாலைகள் நிறுவி பரிசோதிக்கப்படும். உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்பதற்காக, தமிழக அரசுடன் பேச்சு நடந்து வருகிறது.

மேலும் படிக்க

சீமைக்கருவேல மரங்களை அகற்ற இறுதி கொள்கை முடிவு: சென்னை உயர்நீதிமன்றம்!

புதிய மின் இணைப்பு தேவையெனில் உயிர்காக்கும் கருவி கட்டாயம்!

English Summary: Sea Wind Power Station: Research Center at Dhanushkodi!
Published on: 10 April 2022, 10:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now