மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 May, 2019 10:36 AM IST

கடந்த மாத இறுதியில் வங்க கடலில் மையம் கொண்ட புயல் மேற்கு நோக்கி நகர்த்து இன்று முற்பகல் அளவில் கரையை கடக்க உள்ளது. ஒடிசாவில் உள்ள பூரி மாவட்டத்தில் கரையை கடக்கும் என எதிர் பார்க்க படுகிறது. புயலின் வேகம் மணிக்கு 200  கிமீ ஆக இருக்கும் என வானிலை மையம் கூறகிறது.     

கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற தீவிர புயலினை ஒடிசா மாநிலம் பார்த்ததில்லை எனலாம். இதனால் கடலோரத்தில் உள்ள 11 மாவட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை  பத்து லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக 800 க்கு  அதிகமான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒடிசா விரைந்துள்ளனர். முப்படையினரையும் தயார் நிலையில் இருக்கும் படி உத்தரவிட பட்டுள்ளது.  80  அதிகமான இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்  விமான சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அனைவரையும் வரும் 15 ஆம் தேதி வரை விடுப்பு எடுக்க அனுமதிக்க கூடாது என்ற சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவை மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக கப்பற்படை தெரிவிக்கிறது. மேலும் மக்களுக்கு தேவையான உணவு, குடி நீர், பால் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஆந்திர, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது. அண்டை மாநிலமான ஆந்திரவில் உள்ள கடலோர மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.அதிகபட்சமாக 173.75 மி.மீ மழை இதுவரை பதிவாகியுள்ளது.      

English Summary: Severe Storm: Due To 'Fani' 80 trains are Cancelled: Flight Services are stopped:
Published on: 03 May 2019, 10:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now