மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 January, 2023 7:39 AM IST
Eggs

முட்டையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சாப்பிடுவது உண்டு .சிலருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிட்டால் பிடிக்கும் .சிலருக்கு வேகவைத்து சாப்பிட்டால் பிடிக்கும் .இன்னும் சிலர் அதை ஹாப் பாயில் செய்து சாப்பிட்டால் பிடிக்கும் .சில எக்சர்சைஸ் மற்றும் ஜிம் போவோர் முட்டையை பச்சையாக சாப்பிடுவது உண்டு. சொல்ல போனால் முட்டை நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அப்படிப்பட்ட முட்டையின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முட்டை விலை உயர்வு (Egg Price hiked)

நாளுக்கு நாள் முட்டையின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேவை அதிகரிப்பால் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. அதன்படி 550 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்ந்துது 555 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 40 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில், இதுவே அதிகபட்ச முட்டை விலையாகும். இதற்கு முன் 2 முறை முட்டையின் அதிகபட்ச விலை 550 காசாக இருந்துள்ளது. முட்டையின் சில்லறை விற்பனை விலை ரூ.6.50 ஆக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜன் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலேசியாவுக்கு மட்டும் ஒரு மாதத்தில் சுமார் 4 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக மாதம் ஒன்றுக்கு சுமார் 10 கோடி முட்டைகள் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க தமிழகம், கேரளாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி முட்டை விற்பனை சூடுபிடித்தது. அதே நேரத்தில் வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கி இருப்பதால் அங்கும் முட்டையின் தேவை அதிகரித்து, அதிகளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பொதுமக்களிடம் நுகர்வு அதிகரிப்பு, தீவன விலை உயர்வு போன்றவையே முட்டை விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.

மேலும் படிக்க

பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? ரேஷன் கடைகளில் மாற்றம் வருமா?

PM Kisan திட்டத்தில் அதிகரிக்கப்படும் நிதி: விவசாயிகளுக்கு குட் நியூஸ்!

English Summary: Shocking egg price: Like gold, the price of eggs has risen sharply!
Published on: 03 January 2023, 04:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now