News

Friday, 11 November 2022 05:44 PM , by: T. Vigneshwaran

Silver Price

கடந்த சில நாட்களாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகை வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கின்றனர். எரிசக்தி நெருக்கடி ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்கிற காரணத்தினால், யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்களை வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 38,400 ஆக உள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது. 8 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 41,888 ஆக உள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களிலும் இன்று விலை சீராக உள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ. 61,900 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.500 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 4,875 ஆகவும், சவரனுக்கு ரூ.39,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,318 என சவரனுக்கு ரூ. 42,544 ஆக விற்பனையாகிறது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.67.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.67,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.6,100 அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க:

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

மோடி கையால் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)