News

Saturday, 07 September 2019 10:58 AM

சென்னை மற்றும் புறநகரில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வேலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

ஒடிசா அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாகவும், தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நுங்கம்பாகம், எழும்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, கோயம்பேடு, ஆழ்வார்பேட்டை, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலான மழை பெய்தது, இதன் காரணமாக  சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போன்று புறநகர் பகுதிகளான தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், முடிச்சூர், பெருங்குளத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.  

அதிக பட்ச மழையாக கன்னியாகுமரி மாவட்டம் கோதையாரில் 9 செ.மீ மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 6 செ.மீ மழையும், பாபநாசம் குழித்துறையில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

K.Sakthipriya
Krishi Jagran 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)