மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 September, 2020 3:19 PM IST
Credit By : India Mart

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் சோலார் மின்சாரம் மூலம் ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் இரைத்து அப்பகுதி மக்கள் நெல்சாகுபடி செய்து அசத்தி வருகின்றனர்.

வானம் பார்த்து பூமியாக இருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த பணிகள் மிக குறைவாகவே நடைபெற்று வருகிறது. இதனிடையே, கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திர பாண்டியன் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து கடந்த பல ஆண்டுகளாக மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருந்தார்.

கடந்தாண்டு வேளாண்மைத்துறை சார்பில் விவசாய மேம்பாட்டு திட்டத்தில் 80 சதவீதம் மானியத்துடன் சோலார் தகடு அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட ராஜேந்திரபாண்டியன், ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சோலார் தகடு அமைத்து அதன்மூலம் ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீரை இரைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறார். வறட்சி நிலத்திலும் பருவமழையை எதிர்பார்க்காமல் 4 ஏக்கர் நிலத்தில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக பாரம்பரிய முறையில் உழவு செய்து நெல் விதைக்கும் பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நெற்பயிர்கள் வளர தொடங்கியுள்ளது.இதுகுறித்து ராஜேந்திர பாண்டியன் கூறியதாவது, விவசாயிகள் மழையை எதிர்பாரக்காமல் அழிந்துவரும் விவசாயத்தை பாதுகாக்க சோலார் மின்சாரம் மூலம் போர்வெல் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்றார். வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தை விளைச்சல் மாவட்டமாக மாற்றலாம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

பாரம்பரிய காய்கறி சாகுடிபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - புதியத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்!!

English Summary: Small part today... big part tomorrow... great agriculture enriched by solar power!
Published on: 24 September 2020, 03:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now