பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 March, 2022 8:48 AM IST
Smart phone for heirs of soldiers

புதுடில்லியில், எல்லைப் பாதுகாப்பு பணியின் போது வீர மரணம் அடைந்த இந்தோ - திபெத் போலீசாரின் குடும்பங்களுக்கு, 'ஸ்மார்ட் போன்'கள் (Smart Phones) வழங்கப்பட்டன. கடந்த 1962ல் இந்தியா மீது, சீனா போர் தொடுத்தது. இதையடுத்து, 3,488 கி.மீ., எல்லையை பாதுகாக்க, இந்தோ - திபெத் போலீஸ் படை உருவாக்கப் பட்டது. இதில், 90 ஆயிரம் வீரர்கள் பணிபுரிகின்றனர்.

ஸ்மார்ட் போன் (Smartphone)

எல்லை பாதுகாப்பு பணியின் போது ஏற்படும் மோதல்களில் பலர் வீர மரணம் அடைகின்றனர். இந்நிலையில், அவர்களின் வாரிசு அல்லது குடும்பங்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் விழா, டில்லியில் உள்ள இந்தோ - திபெத் போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில் வீர மரணம் அடைந்த வீரர்களின் வாரிசுகளுக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டது.

இது குறித்து இந்தோ - திபெத் போலீஸ் செய்தி தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக, வீர மரணம் எய்திய இந்தோ - திபெத் போலீசாரின் வாரிசுகளுக்கு, ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படுகின்றன. வீர மரணம் எய்தியோர் மனைவியர் நலச் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் 75 வலு சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், ஸ்மார்ட் போன் வழங்கும் விழாவும் நேற்று நடைபெற்றது. மேலும், 75 வது இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாட மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளையும், போட்டிகளையும் நடத்தி வருகிறது.

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்திய தேர்தல் கமிஷன் தயார்!

தொழில் துறையினருக்கு உதவும் வகையில் அரசின் புதிய திட்டம்!

English Summary: Smart phone for heirs of soldiers who died heroically on the job!
Published on: 13 March 2022, 08:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now