News

Thursday, 10 November 2022 07:11 PM , by: T. Vigneshwaran

Solar Power India

2022ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களில் இந்தியா சூரிய சக்தியை அதிகளவு பயன்படுத்தியதன் காரணமாக, ஏறக்குறைய 420 கோடி டாலர் மதிப்பிலான எரிபொருளை சேமித்துள்ளது என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுளது.

2022ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களில் இந்தியா சூரிய சக்தியை அதிகளவு பயன்படுத்தியதன் காரணமாக, ஏறக்குறைய 420 கோடி டாலர் மதிப்பிலான எரிபொருளை சேமித்துள்ளது என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுளது.

இந்த தொகை 1.94 கோடி டன் நிலக்கரி அளவுக்கு சமமாகும். ஏற்கெனவே நிலக்கரி பற்றாக்குறையால் திணறிவரும் இந்தியா, சோலார் மின்சக்தி மாறியதால் 1.94 கோடி டன் நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்துள்ளது

எரிசக்தி மற்றும் சோலார் சக்தி, சுத்தமான காற்று குறித்து ஆய்வு செய்து வரும் எம்பர் எனும் ஆய்வுநிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தியை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதிலும் டாப்-10 பொருளாதாரங்களில், ஆசியாவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, வியட்நாம் நாடுகள் உள்ளன

அதில் சோலார் மின்சக்தி உற்பத்தியில், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், பிலிப்பைன், தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிகமான பங்களிப்பு செய்கின்றன. இந்த நாடுகளால், கடந்த 6 மாதங்களில் 3400 கோடி டாலர் மதிப்பிலான எரிபொருள் பயன்படுத்துவது சேமிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த எரிபொருள் பயன்பாட்டில் 9சதவீதமாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, 2022, ஜனவரி முதல் ஜூன்வரையிலான மாதங்களில் 420 கோடி டாலர் மதிப்பிலான நிலக்கரியை சேமித்துள்ளது. அதாவது, 1.94 கோடிடன் நிலக்கரியை பயன்படுத்தாமல் இந்தியா தவிர்த்துள்ளது.

சீனாவைப் பொறுத்தவரை அதிகமான பங்களிப்பு செய்து வருகிறது. சீனாவில் ஒட்டுமொத்த மின்சக்தி தேவையில் 5 சதவீதம் சோலார் மின்சக்தி மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 2100 கோடி டாலர் மதிப்பிலான நிலக்கரி, இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைத்துள்ளது

ஜப்பான் 2வது இடத்தில் உள்ளது. சோலார் மின்சக்தியை பயன்படுத்துவதால், 560 கோடி டாலர் மதிப்பிலான எரிபொருள் பயன்படுத்துவதை மிச்சப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:

மின் கட்டணம் குறைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பரவும் எலி காய்ச்சல்! தடுப்பு தீவிரம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)