News

Sunday, 14 November 2021 09:37 AM , by: Elavarse Sivakumar

Credit : Maalaimalar

கனமழையால் ஏற்பட்டுள்ளப் பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

நான்கு மாதங்களில் திமுக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டெல்டா பகுதிகளில் மழையால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விரைவில் நிவாரணம் (Relief soon

எந்த சூழலிலும் திமுக அரசு விவசாயிகளைக் கண் போல காக்கும். பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காக்க நடவடிக்கை (Action to protect)

இயன்ற அளவிற்கு பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பயிர் சேதங்களைக் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

சேதம் தவிர்ப்பு (Damage avoidance)

4 மாதங்களில் திமுக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

நிரந்திரத் தீர்வு (Permanent solution)

சிலர் மழை வெள்ளப் பாதிப்புகளை வைத்து அரசியல் செய்கிறார்கள். 2015ல் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதைப்போல் அல்லாமல் முன்கூட்டியே உபரி நீரை வெளியேற்றினோம்.சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வை நோக்கி திமுக அரசு செயல்படுகிறது.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)