News

Wednesday, 29 May 2019 05:02 PM

தமிழகம் கடும் வறட்சியினை தற்போது சந்தித்து வருகிறது. பெரும்பாலான நீர் நிலைகள் தண்ணீர் இன்றி கவலைக்கு இடமாக இருந்து வருகிறது. நிலத்தடி நீர் வற்றி விட்டதால் விவசாய நிலங்கள் வான் நோக்கி காத்திருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை  பெரும்பாலான விவசாகிகள் மழையினை நம்பி விவசாயம் செய்து வருகிறார்கள்.இம்முறை கோடை மழையும்  சரிவர கைகொடுக்காததால் விவசாகிகள் அனைவரும்  தென்மேற்கு பருவ மழையினை எதிர்பார்த்து உள்ளனர்.

தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை  பொழியும். இம்மழையினால் டெல்டா மாவட்ட விவசாகிகள் மட்டுமின்றி அனைத்து மாவட்ட விவசாகிகளுக்கும் பயன் பெறுவார்கள்.

தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பயிர் மேலாண்மை துறைகாலநிலை ஆராய்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் அனைத்து மாவட்டங்களில் பெய்ய விருக்கும் மழையின் அளவு குறித்து வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் கூறினார்.

நடப்பாண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பினை ஆஸ்திரேலிய நாட்டின்மழை மனிதன்'என்ற கணினியின் துணை  கொண்டு  பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதி மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றை பயன்படுத்தி  நடப்பாண்டுக்கான பருவமழை கணக்கிட பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பு 2019

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)