News

Monday, 08 June 2020 07:01 PM , by: Daisy Rose Mary

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் சாரல் மழையுடன் பருவமழை தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தென்காசி, பொள்ளாச்சி பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

கார் நெல் நாற்றுப் பணிகள் தொடக்கம்

கேரளாவைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய தமிழகத்திலும் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் வடகரை, மேக்கரை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த கன மழையால் செங்கோட்டை அருகே உள்ள 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரால் வடகரை, இலத்தூர் வாவாநகரம், அச்சன் புதூர், சிவராமபேட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6,500 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் பயன்பெற்று வருகிறது. தற்போது இப்பகுதிகளில் கார் நெல் சாகுபடிக்காக விதை நெல் நாற்றுப்பணிகளை விவசாயிகள் முழு வீச்சில் துவங்கியுள்ளனர்.

ஆழியாறு அணை திறப்பு

பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு அணையிலிருந்து முதல் போக நெல் சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பழைய ஆயக்கட்டு பாசனத் திட்டத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த அணையின் தண்ணீர் மூலம் இரண்டு போகம் நெல், கரும்பு, மற்றும் வாழை சாகுபடி நடைபெறும். தற்போது, இதன் மூலம் சுமார் 6,400 ஏக்கர் பரப்பரவிள் முதல் போக நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது

பருவமழை தீவிரம்

இதனிடையே கர்நாடகா, ராயலசீமா, தமிழ்நாடு, வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது பருவமழையின் வட எல்லை கார்வார், ஷிமோகா, தும்கூர், சித்தூர், சென்னை வழியாக செல்கிறது.

தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கான ஆகிய மாநிலங்களின் மேலும் சில பகுதிகளிலும் சிக்கிம், ஒடிசாவின் சில பகுதிகளிலும் அடுத்த இரண்டு நாட்களில் நல்ல மழை பொழிவுக்கான சூழ்நிலை நிலவுவதாக இந்திய வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்காளவிரிகுடா, அதை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடலில் உள்ள புயல் சுழற்சி வங்காள விரிகுடாவின் கிழங்கு மத்திய பகுதிகளில் நிலை கொண்டு இடைநிலை வளிமண்டல நிலை வரை விரிவடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவின் கிழங்கு மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும் இது மேற்கு வடக்கு முகமாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

#பருவமழை2020 : தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)