News

Friday, 20 May 2022 05:46 PM , by: Deiva Bindhiya

Southwest monsoon begins on the 23rd: What is the weather like?

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான், தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும், வழக்கமாக மே மாத இறுதயிலோ அல்லது ஜூன் மாத முதல் வாரத்திலோ தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுவது வழக்கமாகும்.

அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம், இதனை சரிவர கணித்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதை அறிவிக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கமாகும் என்பது குறிப்பிடதக்கது. ஆனால், இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிகின்றன.

இதையடுத்து வருகிற 27ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தற்போது சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27ந் தேதிக்கு பதில் 23ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

TNPSC: குரூப்- 2 தேர்வு மையம் மாற்றம் - ஆட்சியர் அவசர அறிவிப்பு!

தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் ஏற்பாட வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

வரும் நாட்களில் நீர் வீழ்ச்சி போன்ற சுற்றாலத் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன, எனவே வானிலை நிலவரம் அறிந்து, மக்கள் சுற்றாலத் தளங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:

State Bank: 2வது முறையாக உயர்ந்த வட்டி விகிதம்! விவரம் உள்ளே!

வரும் நாட்களில் இந்நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க உள்ளன

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)