News

Wednesday, 19 May 2021 07:07 PM , by: Daisy Rose Mary

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகவும் கருதப்படுகிறது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலமானது வரும் 31ஆம் தேதி கேரளாவில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுருந்த நீண்டகால வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காலம் முன்கூட்டியே வரும் 21 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

நடப்பாண்டு தொடங்கும் தென்மேற்கு பருவமழை சராசரியாக 98 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், வடக்கு-சத்தீஸ்கர், கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் அசாம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளைத் தவிர்த்து, நாட்டின் மற்ற எல்லா பகுதிகளிலும் மழை சராசரி அளவாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

மேலும், மத்தியகிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த மூன்று நாட்களில் மேலும் வலுவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பிடிக்க...

PM-Kusum Yojana க்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் ஆன்லைனில் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தவேண்டாம் - மத்திய அரசு!!

Ather Energy மின்சார ஸ்கூட்டர் காப்புரிமை கசிந்தது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)