மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 May, 2022 6:41 AM IST
Southwest monsoon starts early

தென்மேற்கு பருவமழைக் காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் திங்கள் கிழமையன்றே தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையைத் தான் இந்திய விவசாயிகள் பிரதானமாக நம்பியிருக்கின்றனர்.

தென்மேற்குப் பருவ மழை (South west monsoon)

இந்நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. அதனால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவக் காற்றால் மழை பெய்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐஎம்டி பகிர்ந்த ட்வீட்டில், "தென்மேற்கு பருவமழையானது இன்று (மே 16 ஆம் தேதி) தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடங்கிவிட்டது. இது மேலும் வலுப்பெற்று, ஒட்டுமொத்த அந்தமான நிக்கோபார் பகுதி, வங்கக்கடலின் கிழக்கு-மத்திய பகுதிகளிலும் அடுத்த இரண்டு, மூன்று தினங்களில் உருவாக சாதகமான சூழல் நிலவுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஐஎம்டி வெளியிட்ட ட்வீட்டில் தென்மேற்கு பருவமழையானது ஜூன் 1க்குப் பதிலாக முன் கூட்டியே மே 27ஆம் தேதியிலேயே கேரளாவில் பெய்யக் கூடும் என்று என்று கணித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது. அசானி புயலின் எச்சங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் இந்த சாதகச் சூழல் உருவானதாக விளக்கியிருந்தது.

இந்நிலையில் அந்தமான் நிகோபார் தீவுகளில் திங்கள் கிழமையன்றே தென்மேற்கு பருவமழை உருவாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையளவு (Rain Range)

இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று ஏப்ரலில் வெளியிட்ட முன்அறிவிப்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அறிவிப்பில், வடமாநிலங்கள், மத்திய இந்திய பகுதிகளில் இயல்பானது முதல் அதற்கும் கூடுதலான அளவு மழை பெய்யக்கூடும் என்றும், இமாலய மலை அடிவாரம், வடமேற்கு இந்தியாவிலும் இதே நிலையே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

வடகிழக்கு, வட மேற்கு, தென் பகுதிகளில் இயல்பை விட குறைவான அளவிலேயே மழை இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அடுத்த அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் குறைந்தது நிலத்தடி நீர்!

தீவிரமாகும் வெப்ப அலை: எச்சரிக்கை விடுத்தது சுற்றுச்சூழல் அமைப்பு !

English Summary: Southwest monsoon starts early: Meteorological Center!
Published on: 18 May 2022, 06:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now