அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 August, 2023 9:57 AM IST
Special camp for name change in EB connection it extend to sep 25

தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வந்த வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புத் தாரர்களுக்கென “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்”  மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்படுவதாக அண்மையில் மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினை பயன்படுத்தலாம். இருப்பினும் அவற்றில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு 24.07.2023 முதல் ஒரு மாதக்காலத்திற்கு  சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், முகாமினை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது மின்வாரியம்.

புதிய உத்தரவின்படி, வருகிற செப்.25 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைப்பெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை விடுமுறை தவிர்த்து அனைத்து வேலை நாட்களிலும் (காலை 9 முதல் மாலை 5 வரை) இந்த முகாம் நடைப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம் சிறப்பு முகாமில் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம் பின்வருமாறு-

முன்னோர் இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம் பின்வருமாறு-

  • ஆதார் அட்டை
  • நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது உரிமை ஆவணத்தின் நகல்
  • நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் நகல்
  • செட்டில்மெண்ட் பத்திரம் அல்லது பகிர்வு பத்திரம் சமர்பிக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்படி ID) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம் பின்வருமாறு-

  • நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் அல்லது வளாகம்/அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம்
  • பில்டர்கள்/ டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள்/ குடியிருப்பு வளாகங்கள்/ குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய பின்வரும் ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

வளாகத்தின் விற்பனையின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை
  • நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது விற்பனைப் பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம்/ செட்டில்மெண்ட் பத்திரம் போன்றவை அல்லது நீதிமன்ற உத்தரவு
  • நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதி அல்லாத நிலையில், விற்பனைப் பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் ( பரிசு பத்திரம்/ செட்டில்மெண்ட் பத்திரம் போன்றவை) அல்லது நீதிமன்ற உத்தரவு

விண்ணப்பதாரர் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில், நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.726 (இதில் சேவைக் கட்டணமாக ரூ.615 மற்றும் ஜிஎஸ்டிக்கு ரூ.111 அடங்கும்).

பொதுமக்கள் இந்த நேரடி சிறப்பு முகாமினை பயன்படுத்தி மின் இணைப்பு பெயர் மாற்ற தேவையினை பூர்த்தி செய்து பயனடையுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் காண்க:

e-NAM திட்டம்- ஒற்றை உரிமம் சான்று பெறுவது ஏன் கட்டாயம்?

WhatsApp-ல் வரும் spam மெசேஜ்- ரிப்போர்ட் செய்வது எப்படி?

English Summary: Special camp for name change in EB connection it extend to sep 25
Published on: 28 August 2023, 09:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now