News

Friday, 24 December 2021 12:10 PM , by: Deiva Bindhiya

Special trains for Pongal!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்பே பொங்கல் சிறப்பு பேருந்துகள், மற்றும் அதன் முழு விவரங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது. 

இதனையடுத்து சிறப்பு ரயில்களின் விவரங்களும் வெளியாகி உள்ளன. வாருங்கள் பார்ப்போம்,

தாம்பரம்-திருநெல்வேலி: ரயில் எண் (06001) மற்றும் (06002)

(06001) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12ஆம் தேதி இரவு 09.45 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 08:15 மணிக்கு திருநெல்வேலியை அடையும். (06002) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி இரவு 09.30 மணிக்கு ரயில் (06002) புறப்பட்டு, மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

சென்னை-நாகர்கோவில்: ரயில் எண் (06005) மற்றும் (06006)

(06005) சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி பிற்பகல் 03.30 மணிக்கு ரயில்புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.20மணிக்கு நாகர்கோவிலை அடையும். (06006) நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி பிற்பகல் 03.10 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 05.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

நாகர்கோவில்-தாம்பரம்: ரயில் எண் (06003) மற்றும் (06004)

(06003) நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16ஆம் தேதி மாலை 04.15மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். (06004) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி பிற்பகல் 03.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

திருநெல்வேலி-தாம்பரம் (வழி:தென்காசி): ரயில் எண் (06040)

(06040) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 16ஆம் தேதி இரவு 7மணிக்கு ரயில் புறப்பட்டு, (தென்காசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாசலம் வழியாக) தாம்பரத்தை மறுநாள் காலை 07.55 மணிக்கு வந்தடையும்.

தாம்பரத்தில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி காலை 10.45 மணிக்கு ரயில் எண் (06039) புறப்பட்டு, இரவு 10.30மணிக்கு திருநெல்வேலியை அடையும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (டிசம்பர்-25) காலை 8மணி முதல் தொடங்கும். இம்முறையும் தமிழகம் முழுவதும் மக்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட அரசு, இந்த சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

மேலும் படிக்க:

பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்கள்

பொங்கல் பரிசு தொகுப்புக்கான தேதி அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)