மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 April, 2019 12:36 PM IST

இலங்கையில் நேற்று பல்வேறு இடங்களில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். உலகெங்கும் ஈஸ்டர் திருநாள் நேற்று கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில்   இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு அரங்கேறி உள்ளது. குறிப்பாக இத்தாக்குதலானது தேவாலயங்களின் மீது நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தெரியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்புவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள பல்வேறு  நட்சத்திர விடுதிகளில்  குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு எனும் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 290 எட்டியது. மேலும் 400 அதிகமானோர் காயமடைதிருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றனவெளிநாட்டினை சேர்த்த பலரும் இதில் இறந்திருக்கின்றனர். இதுவரை 6 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் குறித்து முன்னரே அறிவிப்பு கிடைத்த போதிலும், போதிய பாதுகாப்பு வழங்கத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங் தெரிவித்துள்ளார். தேசிய தவுத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் தாயிம் மொஹமட் சஹரானின் தலைமையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினரால் தகவல் கொடுத்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது வருந்தத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ,அவரது டிவீட்டர் பக்கத்தில் அவர்களது அறிவிப்பு கடிதத்தை வெளியீட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

 இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 24  பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. உள்நாட்டுப் போர் முடிந்தபின்பு, அங்கு நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இதனை  கூறலாம்.

குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்  ஈஃபில் டவரின் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டது.

English Summary: Sri Lanka's Bomb Blast:Hit Many Churches and Five Star Hotels
Published on: 22 April 2019, 12:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now