News

Thursday, 30 May 2019 07:49 AM

இந்திய துணை ராணுவப்படையில் ஒன்றான எஸ்எஸ்பி (Sashastra Seema Bal) படையில், காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிகள் நிரப்பப்படுகிறது. நாடு முழுவதும் இதற்க்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரங்கள்
நிறுவனம்: Sashastra Seema Bal
பணியிடம்: நாடு முழுவதும்
அமைப்பு: மத்திய அரசு
காலி பணியிடங்கள்: 290, பொது (general) 225, எஸ்சி (SC)-43 ; எஸ்டி (ST)-42
வயது வரம்பு: 35. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 7 ஜூன் 2019
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: ARC RTC, SSB, Gorakhpur
இந்த பணியில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ssb.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மேற்குறிப்பிட்ட முகவரிக்கு ஜூன் 7ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)