சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 17 August, 2019 11:03 AM IST

மத்திய பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு துறையில்  230 பிரிவுகளில் சுமார் 1351 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.  இதற்கான தகுதி தேர்வுகள் கணினி வழி முறையில் நடைபெறும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும்  17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் காலியாக இருப்பதாக சென்னை தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா தெரிவித்துள்ளார். இந்த 17 பிரிவுகளில்,  9 பட்டதாரி அளவிலும்,  5 மேல் நிலை மற்றும் 3 உயர் நிலை அளவிலும் இருக்குமென கூறியுள்ளார்.

பணியிடங்கள்,  தேவையான தகுதிகள், விண்ணப்ப முறைகள், தேர்வு குறித்த விவரங்கள் அனைத்தும் https://ssc.nic.in/ அல்லது http://sscsr.gov.in/ என்ற இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எஸ்சி/எஸ்டி ) மற்றும் மாற்றுத் திறனாளிகள்  இலவசமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2019 (மாலை ஐந்து மணிவரை மட்டுமே). தேர்வுகள் அக்டோபர் 14 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு வேலையை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Staff Selection Commission (SSC) Recruitment 2019: Apply Online 1351 Vacancies All over India
Published on: 17 August 2019, 11:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now