News

Friday, 12 August 2022 07:23 PM , by: T. Vigneshwaran

Stock of paddy seeds for subsidized supply

பருவ காலத்திற்கு ஏற்ப விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் விதைகள் வேளாண் உதவி மைங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மானிய விலையில் விவசாயிகளுக்கு நெல்விதைகள் வழங்குவதற்காக கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, இதை பெற விவசாயிகள் ஆதார், கைபேசி, சர்வே எண் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா பருவத்துக்கு தேவையான நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல் ரகங்களான ஆர்.என்.ஆர். 15048 ஆதார விதைகள் மற்றும் சான்று விதைகள் 3,140 கிலோவும், டி.கே.எம். 13 ஆதார விதைகள் 2,945 கிலோவும் இருப்பு உள்ளது.

இந்த நெல் விதைகள் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்களின் ஆதார், கைப்பேசி, சர்வே எண் ஆகிய ஆவணங்களை வழங்கி மானிய விலையில் நெல் விதைகளை வாங்கி பயன் பெறலாம் என்று மோகனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

ஒரே ஆண்டில் 3வது முறையாக பால் விலை உயர்வு

தேசியக் கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருள்

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)