மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 September, 2020 7:22 AM IST

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பட்டயப்படிப்புகளுக்கான 2020-21ம் ஆண்டிற்கான மாணவர்சேர்க்கை இணையதளம் வாயிலாகத் துவங்கியது.

பட்டயப்படிப்புகள் (Diploma)

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் (TNAU) கீழ் இயங்கி வரும் 3 உறுப்புக் கல்வி நிலையங்கள் மற்றும் 10 இணைப்புக் கல்வி நிலையங்களில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகள் (Diploma) கற்பிக்கப்படுகின்றன. இந்தப்படிப்புகளில் உள்ள 860 இடங்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். நீ.குமார் இணையதள வாயிலாகத் துவக்கி வைத்தார்.

மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்து கொள்ள https://tnauonline.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் கையேடு உதவியாக இருக்கும். மாணவர்களின் வசதிக்காக பட்டயப்படிப்பிற்கான தகவல் கையேடு இந்த ஆண்டு முதல் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (https://tnauonline.in) உள்ள விண்ணப்பத்தினை இணையதள வாயிலாக (online) பூர்த்தி செய்து பின்பு பதிவிறக்கம் (Download) செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரியக் கட்டணம் (Demand Draft)மற்றும் சான்றிதழ்களை இணைத்து முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயமுத்தூர் - 641 003 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 0422-6611322, 0422-6611328, 0422-6611345, 0422-6611346 ஆகிய தொலைபேசி உதவி சேவை எண்களை, அனைத்து வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பதாரர்கள் அரசு கணினி சேவை மையங்களை தொடர்பு கொண்டும், இணையதள வாயிலாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

கடைசிநாள் (Last Date)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 16.10.2020. பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் விண்ணப்பக்கட்டணம் (கேட்பு வரைவோலை) தபால் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21.10.2020 மாலை 5 மணி ஆகும்.

தரவரிசை (Ranking)

தரவரிசைப்பட்டியல் வரும் 29.10.2020 அன்று வெளியிடப்படும் என்று முனைவர் மா.கல்யாணசுந்தரம், முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்க்கை) தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

விதைகளை வாங்கவும் வந்துவிட்டது Online -APP- விவசாயிகளுக்கு புதிய வசதி

அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க 50% மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Student Admission for Agricultural Diploma Courses - Launched Online!
Published on: 12 September 2020, 07:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now