நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 August, 2022 11:46 AM IST

பீகார் மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அரசியல் பாட பிரிவில் 100க்கு 151 மார்க்குகள் எடுத்துள்ளார். இதற்கு அச்சுபிழையேக் காரணம் என பல்கலைக்கழகம், தெரிவித்து உள்ளது.

தேர்வுகள் முடிவுகள்

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ளது லலித்நாராயண் மிதிலா பல்கலைக்கழகம். இந்த பல்கலைகழகத்தில் ஹானர்ஸ் இளங்கலை பிரிவு மாணவர் ஒருவர் அரசியல் பாட தேர்வை எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அந்த மாணவர் பெற்ற மதிப்பெண்ணைப் பார்த்து அந்த மாணவர் மட்டுமல்லாமல், சக மாணவர்களும், மற்றவர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.

151 மதிப்பெண்கள்

காரணம் என்னவென்றால், தேர்வு எழுதியது 100 மதிப்பண்களுக்கு. வந்திருப்தோ, 151 மதிப்பெண்கள். இதைப்பார்த்தால், வியப்பு ஏற்படுவது இயற்கைதானே.இந்த மதிப்பெண் வித்தியாசம் குறித்து மாணவர் கூறுகையில் இவை தற்காலிக மதிப்பெண் பட்டியல் என்ற போதிலும் கடைசி நேரத்திலாவது அதிகாரிகள் மதிப்பெண் பட்டியலை சரி செய்து இருந்திருக்கலாம் என்று ஆதங்கப்பட்டார்.


இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பி.காம் மாணவர் ஒருவர் கணக்கு மற்றும் நிதிதாள் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் அடுத்த கட்ட தரத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளார். இதை கண்டுபிடித்த மாணவர் தவறை சுட்டிக்காட்டியதை அடுத்து அவருக்கு சரியான மதிப்பெண் பட்டியலை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கி உள்ளது.

பொதுவாக விடைத்தாளைத்திருத்தும் ஆசிரியர்கள் சில மதிப்பெண்களை குறைத்தோ அல்லது கூட்டியோ போட்டுப் பிழை செய்வது வழக்கம். ஆனால் இந்தப் பிழை பெரும் பிழையாக மாறிவிட்டது. விசாரணை நடத்தி பல்கலைக்கழகம், அச்சுப்பிழையே இந்தத் தவறுக்கு காரணம் என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க...

ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!

கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!

English Summary: Student who scored 151 out of 100- teachers carelessness!
Published on: 01 August 2022, 11:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now