News

Saturday, 26 February 2022 07:32 PM , by: R. Balakrishnan

Students interested in studying agriculture in Tamil

வேளாண் படிப்புகளை தமிழ் வழியில் பயில மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்புக் கல்லுாரிகளில், 12 இளநிலை பட்டப்படிப்புகளில், 4,670 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். கடந்த, 23ம் தேதி முதல் இதற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.

தமிழ் வழிக் கல்வி (Tamil Education)

நடப்பாண்டு முதல், தமிழ் வழியில், இளம் அறிவியல் வேளாண் மற்றும் தோட்டக்கலை ஆகிய பட்டப்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இதுவரை, வேளாண் மற்றும் தோட்டக்கலை வகுப்புகளில் தலா 15 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

தமிழ் வழியில் பயில மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளதால், அதற்கான இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் கூறியதாவது: ஒரு சில மாணவர்கள் ஆங்கில வழியில் அரசு கல்லுாரிகளில் கிடைத்த இடங்களை விடுத்து தமிழ் வழிக்கல்வியை தேர்வு செய்தனர். தமிழ் வழியில் கற்கும்போது எளிமையாக இருப்பது காரணம். அவர்கள் கற்ற கல்வி, வேளாண் வளர்ச்சி கிராமங்களை சென்றடைவதற்கு இது உறுதுணையாக இருக்கும்.

எளிய முறையில் கற்க, பாட புத்தகங்களை தமிழில் தயாரித்துள்ளோம். தமிழ் மீது ஆர்வம் உள்ள பேராசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் அரசு பணியில் சேர்வதற்கு, தனி ஒதுக்கீடு இருப்பதால் மாணவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க

என்ன கேட்டாலும் உடனே பதில் அளிக்கும் அசாத்திய திறமை வாய்ந்த குழந்தை!

உலகத் தாய்மொழி தினம்: தாய்மொழியாம் தமிழை வளர்ப்போம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)