News

Thursday, 23 December 2021 05:15 PM , by: R. Balakrishnan

Students studying for self

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பூம்பிடாகை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 5 மாதங்களாக ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் தாங்களாகவே கற்கும் அவல நிலை உள்ளது. இப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் 2 ஆண்டுகளுக்கு முன் காலமானார். உதவி ஆசிரியரும் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி துவங்கி 5 மாதங்களாகியும் இதுவரை ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.

தானாக கற்கும் மாணவர்கள் (Students studying for self)

ஆசிரியர்கள் வராவிட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தவில்லை. இதை அறிந்த கிராமத்து பட்டதாரி இளைஞர்கள் அவ்வப்போது வந்து பாடம்
நடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். மதிய உணவு (Lunch) வழங்கப்படுகிறது. இளைஞர்கள் வராத நேரங்களில் மாணவர்கள் தாங்களாகவே பாடங்களை கற்கின்றனர். சில மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ஆடு மாடு மேய்க்கவும், வீட்டு வேலைகளை செய்தும் எதிர்கால வாழ்க்கையை வீணாக்கி வருகின்றனர்.

கேள்விக்குறியாகும் கல்வி 

கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இங்கு ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவக்குமார் நரிக்குடி வட்டார கல்வி அலுவலர்: இங்கு பணியாற்றிய பொறுப்பு ஆசிரியர் சரிவர பள்ளிக்கு வராமல் விருப்ப ஓய்வில் செல்வதாக தெரிவித்தார். பள்ளிக்கு வராத நாட்களை பூர்த்தி செய்ய பணிக்கு வர வேண்டும் என கேட்டோம். அப்படியிருந்தும் அவர் பணிக்கு வரவில்லை. அவரது சம்பளத்தை பிடித்தம் செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுழற்சி முறையில் (Rotational) நான்கு ஆசிரியர்களையும் நியமித்தோம். மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பதால் போக்குவரத்தை காரணம் காட்டி அவர்களும் பணிக்கு வரவில்லை என்றார்.

மேலும் படிக்க

அரசுப் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மந்திரி!

நவீன வசதிகளுடன் தனியார்ப் பள்ளிகளை மிஞ்சும் அரசுப் பள்ளி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)