மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 February, 2021 4:07 PM IST

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வாங்க மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொப்பரை மற்றும் பெரும்பாலான காய்கறிப் பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீட்டு தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், சொட்டு நீர் உபகரணங்கள் வாங்க மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி கூறுகையில், வீடுகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் மாடியில் தோட்டங்கள் அமைத்து காய்கறிகள் பயிரிட்டால் நன்கு வளரும் என்றும், நல்ல வருமானம் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், இதை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில், காய்கறி உற்பத்தி பெருக்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காய்கறி விதைகள் வழங்கல்

மேலும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் கடந்த நவம்பர் மாதம் மானியத்தில் வழங்கப்பட்டது. தக்காளி, அவரை, வெண்டை, பீன்ஸ், முருங்கை விதை பாக்கெட்டுகள் அடங்கிய தொகுப்பு விலை ரூ.25 மானியம் போக, 15 ரூபாய் செலுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

 

சொட்டுநீர் உபகரணங்கள் வழங்கல்

தற்போது, இரண்டம் கட்டமாக வீட்டு மாடி தோட்டத்திற்கு குறைவான தண்ணீரை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம். இதற்கு, 1,120 ரூபாய் மதிப்புள்ள சொட்டு நீர் பாசன உபகரணங்களை, ரூ.720 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

மானியம் பெறுவது எப்படி?

இதனை பெற விவசாயிகளும், பொதுமக்களும் ஆதார் நகல் கொண்டு வந்து, கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 99655 62700, 95850 98230 என்ற மொபைல் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க

மரவள்ளி கிழங்கிலிருந்து மதிப்புக்கூட்டு பொருள் தாயரிப்பு! - விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி!!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!

நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்வு - சிக்கலில் விவசாயிகள்!

English Summary: Subsidy for drip irrigation equipment to set up home garden
Published on: 11 February 2021, 04:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now