News

Thursday, 20 May 2021 11:26 AM , by: Daisy Rose Mary

பழைய விலைகளுக்கே டி.ஏ.பி. உரத்தை விவசாயிகள் பெறலாம் என்று மத்தய அரசு தெரிவித்துள்ளது.

உயர்மட்ட குழு கூட்டம்

உர விலைகள் குறித்த உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில் உர விலைகள் குறித்த விரிவான விளக்கம் அவருக்கு அளிக்கப்பட்டது.

பாஸ்பொரிக் அமிலம், அம்மோனியா உள்ளிட்டவற்றின் விலைகள் சர்வதேச அளவில் அதிகரித்து வருவதால் உர விலைகள் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. சர்வதேச விலையேற்றத்திற்கு இடையிலும் பழைய விலைகளுக்கே உரங்களை விவசாயிகள் பெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

டிஏபி உரத்திற்கான மானியம் உயர்வு

ஒரு மூட்டை டிஏபி உரத்திற்கான மானியத்தை ரூ 500-ல் இருந்து ரூ 1200 ஆக உயர்த்துவது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இது 140% கூடுதலாகும். இதன் மூலம், சர்வதேச சந்தைகளில் விலையேற்றத்திற்கு இடையிலும், டிஏபி தொடர்ந்து ரூ 1200-க்கே விற்கப்படும், விலையேற்றத்தின் அனைத்து சுமையையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். ஒரு மூட்டைக்கான மானியம் இந்தளவுக்கு இதுவரை உயர்த்தப்பட்டதில்லை.

கடந்த வருடம், ஒரு மூட்டை டிஏபியின் விலை ரூ 1,700 ஆக இருந்தது. அதில் ரூ 500-ஐ மத்திய அரசு மானியமாக வழங்கியது. இதன் காரணமாக ஒரு மூட்டை உரத்தை ரூ 1200-க்கு நிறுவனங்களால் விற்க முடிந்தது.

பழைய விலைக்கே டி.ஏ.பி. உரம்

சமீப காலத்தில், டிஏபியில் பயன்படுத்தப்படும் பாஸ்பொரிக் அமிலம் மற்றும் அம்மோனியா உள்ளிட்டவற்றின் விலை சர்வதேச சந்தைகளில் 60 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு மூட்டை டிஏபியின் விலை ரூ 2400 ஆக இருக்கும் நிலையில், ரூ 500 மானியம் போக ரூ 1900-க்கு உர நிறுவனங்களால் விற்க முடிந்திருக்கும். ஆனால், இன்றைய முடிவின் காரணமாக, ஒரு மூட்டை டிஏபி ரூ 1200-க்கு விவசாயிகளுக்கு தொடர்ந்து கிடைக்கும்.

விவசாயிகளின் நலன் மீது அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், விலையேற்றத்தின் சுமை விவசாயிகள் மீது திணிக்காத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

14,775 கோடி கூடுதல் செலவு

ஒவ்வொரு வருடமும் ரசாயன உரங்களின் மானியங்களுக்காக ரூ 80,000 கோடியை அரசு செலவிடுகிறது. டிஏபி மானியம் உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, கரிப் பருவத்தில் கூடுதலாக ரூ 14,775 கோடியை இந்திய அரசு செலவிடும்.

மேலும் படிக்க...

PM-Kusum Yojana க்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் ஆன்லைனில் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தவேண்டாம் - மத்திய அரசு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)