News

Wednesday, 20 January 2021 09:42 AM , by: Daisy Rose Mary

Credit : Entrepreneurs

தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்க தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்றும் பயன்பெற வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018-2023 எனும் புதிய கொள்கையை 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம் வழங்குவது முக்கிய நோக்கம் ஆகும். அந்த அடிப்படையில் 2021-ம் ஆண்டு புதிதாக தொழில் தொடங்கும் 10 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

எனவே, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் மானியத்தை பெற வருகிற 25-ந் தேதிக்குள் http://startuptn.in/forms/tanseed/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

காளான் உற்பத்தியில் வெற்றி கண்ட சரவணன்! இளைஞர்களுக்கும் வழிகாட்டுகிறார்

ஆன்லைனில் நர்சரி செடிகள் விற்கும் சக்திவேல்! மக்களிடையே அமோக வரவேற்பு

சத்துக்கள் குறையாமல் காய்கறிகளை விளைவிக்க இயற்கை விவசாயத்தால் மட்டுமே முடியும்!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)