News

Monday, 01 March 2021 11:24 AM , by: Daisy Rose Mary

ராமநாதபுரத்தில் சோலார் மின்வேலி அமைக்க அதிகபட்சம் ரூ.2.18 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மின்சார உபயோகத்தைக் குறைக்கவும், இலவச மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழக அரசு சூரிய ஒளியால் இயங்கும் சோலார் மின்வேலி அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியினை 5, 7, 10 வரிசை அமைப்பை தேர்வு செய்து கொள்ளலாம்.

50% மானியம்

சூரிய மின்வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு 5 வரிசை ரூ.250, 7 வரிசைக்கு ரூ.350, 10 வரிசைக்கு ரூ.450 செலவாகும். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கர் அல்லது 1245 மீட்டர் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும். சூரிய மின்வேலி அமைக்க செலவாகும் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.18 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, கடலாடி, கமுதி, போகலுார், நயினார்கோவில் ஆகிய பகுதி விவசாயிகள் வேளாண்துறை அலுவலகத்தை அணுகி கூடுதல் தகவல்களை பெறலாம். அல்லது, வேளாண் உதவிசெயற்பொறியாளர் அலுவலக எண் - 98659 67063 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மானாவாரி வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!

நிவர் (ம) புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம்! விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்ப்பு!

நெல்லில் பழ நோயை எப்படித் தடுக்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)