நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 March, 2021 11:35 AM IST

ராமநாதபுரத்தில் சோலார் மின்வேலி அமைக்க அதிகபட்சம் ரூ.2.18 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மின்சார உபயோகத்தைக் குறைக்கவும், இலவச மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழக அரசு சூரிய ஒளியால் இயங்கும் சோலார் மின்வேலி அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியினை 5, 7, 10 வரிசை அமைப்பை தேர்வு செய்து கொள்ளலாம்.

50% மானியம்

சூரிய மின்வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு 5 வரிசை ரூ.250, 7 வரிசைக்கு ரூ.350, 10 வரிசைக்கு ரூ.450 செலவாகும். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கர் அல்லது 1245 மீட்டர் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும். சூரிய மின்வேலி அமைக்க செலவாகும் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.18 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, கடலாடி, கமுதி, போகலுார், நயினார்கோவில் ஆகிய பகுதி விவசாயிகள் வேளாண்துறை அலுவலகத்தை அணுகி கூடுதல் தகவல்களை பெறலாம். அல்லது, வேளாண் உதவிசெயற்பொறியாளர் அலுவலக எண் - 98659 67063 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மானாவாரி வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!

நிவர் (ம) புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம்! விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்ப்பு!

நெல்லில் பழ நோயை எப்படித் தடுக்கலாம்!

English Summary: Subsidy up to Rs 2 lakh for setting up solar power fence
Published on: 01 March 2021, 11:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now