சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 21 August, 2020 12:48 PM IST
fish ponds in the coconut farm

மீன் வளர்ப்பின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த மீன்வளத்துறை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மீனவர்கள் பண்ணை அமைத்து மீன் வளர்க்கும் போது, அதிக தண்ணீர் விரயமாவதைத் தடுக்கும் வகையில், விரயமாகும் தண்ணீரை, விவசாயத்துக்குப் பயன்படுத்த வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
 
அதன் படி, தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தென்னந்தோப்புகளில் மீன் குட்டை அமைத்து விவசாயம் மேற்கொள்ள மீன்வளத்துறை 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தென்னந்தோப்புகளில் உள்ள குட்டைகளில் மீன் வளர்ப்பு மேற்கொள்ள நடப்பாண்டு ரூ.14.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , விவசாயத்துடன் இணைந்து மீன் வளர்ப்பினை மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் கூடுதலாக வருவாய் ஈட்ட இயலும்.

50 சதவீதம் மானியம்

1000 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்கனவே அமைக்கப்பட்ட குட்டைகளில் மீன் வளர்ப்பு மேற்கொள்ள ஏதுவாக மீன் குஞ்சுகள் மீன் தீவனங்கள் மற்றும் அறுவடை செலவினம் ஆகியவை உள்ளிட்ட செலவினத்திற்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக 25000 வரை மானியம் வழங்கப்படும்.புதிதாக தென்னந்தோப்பில் மீன் வளப்பு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்களும் இதில் பயன்பெறலாம்.

விரும்பமுள்ளவர்கள் உடன் நல்லதங்காள் ஓடைஅணை, கோனேரிப்பட்டி, தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வள ஆய்வாளரை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மீன்வளத்துறை உதவி இயக்குநர் அவலத்தையும் அணுகி விவரங்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... 


சிறு சிறு வேளாண் தொழில் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் வாங்க..!

மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு !!

 

English Summary: Subsidy up to Rs. 25,000 for those who set up fish ponds in the coconut farm
Published on: 21 August 2020, 12:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now