News

Wednesday, 17 August 2022 10:58 AM , by: Elavarse Sivakumar

சென்னையில், ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் தற்போது மாற்றம் காணப்படுவது சிறு ஆறுதலாக உள்ளது.

தங்கத்தின் பக்கம்

உக்ரைன்-ரஷ்யப் போர் தொடங்கியது முதலே தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவி வருகிறது. போர் பதற்றம் காரணமாக சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதனால், தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது. தற்போது, போர் 150 நாட்களைக் கடந்துவிட்டநிலையில், போர் பதற்றம் காரணமாக, பெரும்பாலும் விலைத் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

ரூ.520

இந்நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக, தொடர்ச்சியாகத் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு காணப்படுகிறது. அதாவது கடந்த 2 நாளில் சவரனுக்கு 520ரூபாய் குறைந்துள்ளது.

கிராமுக்கு 65 ரூபாய் சரிந்து, ஒரு கிராமம் 4,849 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 38,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்று முன்தினம்,ஒரு கிராம் தங்கம் 4,914 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 39,312ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருமண சீசன்

ஆவணி முதல் கார்த்திகை வரையிலான திருமண சீசன் தொடங்கியுள்ளநிலையில், தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, தங்க நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே திருமணத்தை வைத்திருப்பவர்கள், விலையில் சரிவு காணப்படும் நாட்களில் தங்கம் வாங்கிச் சேமிக்கலாம்.

மேலும் படிக்க...

தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!

ஆதரவற்றப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.50,000 நிதியுதவி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)