சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 19 April, 2022 2:05 PM IST
Summer rains in Palani

பழநி பகுதியில் தொடர் கோடை மழையால், வயல்களில் உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து கண்மாய்களில் தேக்கும் தண்ணீரை நம்பியே விவசாய தொழில் உள்ளது.

கோடை மழை (Summer Rain)

கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கோடை விவசாயத்திற்கு தயாராகி உள்ளனர். பழநி அருகே பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, பெருமாள்புதூர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் வயல்களில் உழவுப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டிராக்டர்கள் மற்றும் மாடுகள் மூலம் உழவுப்பணி நடந்து வருகிறது. கோடை மழை பெய்ய துவங்கியதைத் தொடர்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொப்பம்பட்டி வட்டார வேளாண் அலுவலர் காளிமுத்து கூறியதாவது: கோடை மழை பெய்ய துவங்கி உள்ளதால், தங்களது விவசாய நிலங்களில் சரிவிற்கு குறுக்கே கோடைஉழவு மேற்கொள்ள வேண்டும்.

இதனால், நிலத்தில் இருக்கும் புழு, பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் மற்றும் நோய்க்காரணிகள் மேலே வந்து சூரிய ஒளி மற்றும் பறவைகளால் அழிக்கப்படுகிறது. மேலும், வரும் காலங்களில் பெய்யும் மழைநீர், நிலத்தினுள் சென்று நிலத்தடி நீர் உயர வாய்ப்பாகும். மேலும், பயிர் மகசூல் அதிகரிக்க உதவும். கோடை உழவினால் மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்பட்டு மண் வளம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள்: 4-வது இடத்தில் இந்தியா!

களைச்செடியில் அழகிய பர்னிச்சர்கள்: இளைஞர்கள் அசத்தல்!

English Summary: Summer rains in Palani: Intensification of agricultural activities!
Published on: 19 April 2022, 02:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now