நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 April, 2022 10:11 AM IST

சமையல் எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரஷ்யா- உக்ரைன் போரின் தாக்கமாகவே சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. இதன்படி, போருக்கு முன்பு ரூ.100 ஆக இருந்த சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது ரூ.200 ஆக உயர்ந்துள்ளது.

தொடரும் போர்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 43 நாட்களாகி விட்டன. இந்தப் போர் தொடர்ந்து நீடித்து வருவதால், இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக 5 மாநிலத் தேர்தல் நடக்கும் வரை, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்திக்கொண்டே வருகிறது. மேலும் சமையல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஆயிரம் ரூபாயை நெருங்கி விட்டது. வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2,500-ஐ தாண்டி விட்டது. இதனால், சரக்கு வாகனங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

அதே வேளையில் சொந்தமாக கார், மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்வை சந்தித்து வருகிறது. கட்டுமான பொருட்களான சிமெண்டு, கம்பி, மணல் உள்ளிட்டவைகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.


எண்ணெய் விலை

உக்ரைனில் இருந்துதான் இந்தியாவுக்கு சூரியகாந்தி எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது அங்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், லிட்டர் ரூ.100-க்கு விற்கப்பட்டு வந்த சூரியகாந்தி எண்ணெய் தற்போது லிட்டர் ரூ.200 வரை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அதன் விலை 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதேபோல் நல்லெண்ணெய் லிட்டர் ரூ.200-ல் இருந்து ரூ.230 ஆகவும், கடலை எண்ணெய் ரூ.180-ல் இருந்து ரூ.220 ஆகவும், தேங்காய் எண்ணெய் ரூ.160-ல் இருந்து ரூ.200 ஆகவும், ரீபைண்ட் ஆயில் ரூ.110-ல் இருந்து ரூ.160 ஆகவும் அதிகரித்துள்ளது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

மேலும் லிட்டர் ரூ.70-க்கு விற்பனையான பாமாயில் ரூ.140 ஆக விலை உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. போரை கைவிட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் உக்ரைன் - ரஷியா போர் இன்னும் முடுவுக்கு வரவில்லை.

மேலும் படிக்க...

கொளுத்தும் வெயிலில் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாதா?

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

English Summary: Sunflower oil is Rs.200 per liter- Palm oil is Rs.140- Housewives in shock!
Published on: 08 April 2022, 10:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now