மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 September, 2022 7:29 PM IST
சூப்பர் திட்டம்

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் வெகு விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியொரு சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றுதான் இந்த கிசான் விகாஸ் பாத்ரா திட்டமாகும். இந்திய அஞ்சல் துறை சார்பில் கடந்த 1988ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில், கிசான் விகாஸ் திட்டமானது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டமாக உள்ளது. அதாவது, மொத்தமாக 124 மாதங்களைக் கொண்ட இந்த திட்டத்தில் 6.9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டு காலத்தில் உங்கள் பணம் அப்படியே இரட்டிப்பாக கிடைக்கிறது.

யாரெல்லாம் இந்தத் திட்டத்தில் சேரலாம்?

இந்தியாவை சேர்ந்த யார் வேண்டுமானாலும், அவர்களது பெயரில் இந்தத் திட்டத்தில் இணையலாம். அதேபோல, குழந்தைகள் சார்பில் பெரியவர்கள் முதலீடு செய்யலாம். மேலும் 3 பெரியவர்கள் கூட்டாக இணைந்தும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

அனைத்து அஞ்சல் நிலைய அலுவலகங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்திய அஞ்சல் நிலைய இணையதளம் அல்லது இண்டர்நெட் பேங்கிங் மூலமாக திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்?

பயனாளர்கள் ரூ.1,000 என்ற அளவில் முதலீடு செய்யலாம். இதற்கடுத்து ரூ.100 என்ற பெருக்கல் வகையில் அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதற்கு வரம்பு எதுவும் கிடையாது. முன்னதாக, கடந்த 1988ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டமானது, பின்னர் மேம்பட்ட மாற்றங்களுடன் 2014ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு பான் அட்டை மற்றும் ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு வருமான ஆதாரம் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க:

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்- டிடிவி

திருச்சியை அச்சுறுத்தும் புதிய வகை 'டைப்பஸ்' காய்ச்சல்

English Summary: Super plan to double your money
Published on: 28 September 2022, 07:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now