பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 September, 2022 11:19 AM IST
Ration Shop

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உணவுப் பொருட்கள் மிகவும் குறைவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகள் (Ration Shops)

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் வழங்கப்பட்டது. அத்துடன் அரசின் நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.ரேஷன் கடைகள் தொடர்பாக நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக "நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை" என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமலுக்கு வர உள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான வசதிகள் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை முதற்கட்டமாக செயல்படுத்த தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை தேர்வு செய்து, மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு இத்திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளார். இத்திட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் கிராமப்புறங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் அதிவேகமான இணைய சேவையை Wifi மூலமாக கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்த முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் Wifi அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இத்திட்டத்திற்கு அடுத்தபடியாக ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி: சூப்பர் ஆஃபர்!

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு.!

English Summary: Super scheme in ration shops: Important Announcement by Co-operative Sector!
Published on: 06 September 2022, 11:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now