மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 June, 2021 1:41 PM IST
Credit : Daily thanthi

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை வரும் ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக வெளி மாநில தொழிலாளர்களும் அடங்குவர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வெளி மாநில தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்திவருகிறது. இதில் சில முக்கிய உத்தரவுகளைப் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்

இதன்படி, ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை இதுவரை அமல்படுத்தாத மாநிலங்கள், அதனை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திட்டத்தின் மூலம் வெளி மாநில தொழிலாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும். தங்களின் சொந்த மாநிலங்களில் என்ன பெறமுடியுமோ, அவற்றை வெளிமாநில ரேஷன் கடைகளில் இருந்தும் பெற முடியும்.

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு 

நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது, மேலும் மாநிலங்களின் தேவைக்கேற்ப புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உணவு தானியங்களை ஒதுக்கவும், அவற்றை விநியோகம் செய்யவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் இருக்கும் பகுதிகளில், மாநிலங்கள் சமூக சமையலறையை நடத்த வேண்டும் என்றும், பெருந்தொற்று முடிவுக்கு வரும்வரை இது தொடர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுக்கவேண்டும், தேசிய தகவல் மையத்துடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மக்கள் குறித்த கணக்கெடுப்பு செய்து வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமற்னம் வலியுறுத்தி உள்ளது

மேலும் படிக்க....

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் வாக்குறுதி!!

மீண்டும் கலைஞரின் உழவர் சந்தை திட்டம்

English Summary: Supreme Court orders to implementation One Nation, one ration scheme before july 31st in all states
Published on: 29 June 2021, 01:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now