News

Wednesday, 26 October 2022 07:19 PM , by: T. Vigneshwaran

Electric Cars

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சீரான வளர்ச்சியை எட்டி இருக்கிறது. EV-க்களின் சில்லறை விற்பனை 2021-ஆம் நிதியாண்டில் 134,821 யூனிட்களாக மட்டுமே இருந்த நிலையில், 2022-ஆம் நிதியாண்டில் 429,217 யூனிட்டுகளாக இருப்பதே இதற்கு சாட்சி.மத்திய மற்றும் மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவித்து வரும் நிலையில், Born Electric வாகனங்களை அடுத்த 2 - 3 ஆண்டுக்களில் அறிமுகப்படுத்த உற்பத்தியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். நீங்கள் புதிதாக எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டு வந்தால் ரூ.25 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த கார்களின் பட்டியலை இங்கே பாருங்கள்

மஹிந்திரா எக்ஸ்யுவி400 (Mahindra XUV400)

மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி வாகனமான மஹிந்திரா400 காரின் விலையை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 456 கிமீ ரேஞ்சை கொடுக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

டாடா நெக்ஸான் EV (Tata Nexon EV)

டாடா-வின் Nexon EV காரானது ரூ.14.99 லட்சம் என்ற துவக்க விலையில் இருந்து அதிகபட்சம் ரூ.17.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது மற்றும் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை செல்லும். அதே போல ரூ.18.34 லட்சம் முதல் ரூ.19.84 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் Nexon EV Max கார் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 437 கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

டாடா டிகோர் EV (Tata Tigor EV)

டாடா நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான எலெக்ட்ரிக் காரான Tigor EV ரூ.12.49 லட்சம் முதல் ரூ.13.64 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 306 கிமீ தூரம் வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric)

ஹூண்டாய் நிறுவனத்தின் Kona Electric காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.23.84 லட்சம் முதல் ரூ.24.03 லட்சமாக இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ வரை மைலேஜ் தரும் என நிறுவனம் கூறுகிறது.

மேலும் படிக்க:

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜன் சதய விழா

ரேஷன் கடைகளில் 200 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)