News

Monday, 24 May 2021 10:38 AM , by: Daisy Rose Mary

நடப்பு பயிர் பருவத்தில் தமிழ்நாட்டின் சிறு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை டஃபே நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வேளாண் பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாய பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலவச டிராக்டர் வாடகை திட்டம்

இந்நிலையில், டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் லிமிடெட் (TAFE) நடப்பு பயிர் பருவத்தில் தமிழ்நாட்டின் சிறு விவசாயிகளுக்கு ஆதரவாக இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2 ஏக்கர் மற்றும் அதற்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நலனுக்காக இந்தத் திட்டத்தை அறிவித்திருப்பதாக டஃபே நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் மே முதல் ஜூலை வரை சுமார் 1,20,000 ஏக்கர் பரப்பளவில் 50,000 விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று ஒரு நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் பயன்பெற முடியும்?

2 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான உரிமையாளர்களைக் கொண்ட சிறு விவசாயிகளுக்கு இலவசமாக வாடகை அடிப்படையில் 16,500 மாஸ்ஸி பெர்குசன் மற்றும் ஐஷர் டிராக்டர்களையும் 26,800 கருவிகளையும் TAFE வழங்குகிறது.

தமிழக அரசின் உழவன் பயன்பாட்டில் அல்லது கட்டணமில்லா ஹெல்ப்லைன் 1800-4200-100 மூலம் TAFE-வின் டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் அவற்றை வாடகைக்கு எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரணத்திற்கு TAFE இன் அனைத்து பங்களிப்புகளுக்கும் மொத்த செலவு ரூபாய் 15 கோடி என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க....

மஞ்சள் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.12,000 மானியம்!

மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)