News

Thursday, 23 May 2019 06:04 PM

தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல்  18  ஆம் தேதி ஒரே கட்டமாக நடை பெற்றது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளுக்கு தேர்தலானது நடைபெற்றது. இந்த தேர்தலில் பல கட்சிகள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டியிட்டன.

தமிழகத்தை பொறுத்த வரை திராவிட கட்சிகள் அல்லது பிற கட்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் வெகு குறைவு. மேலும் இரு பெரு ஆளுமைகள் இல்லாது எதிர்கொள்ளும் முதல் தேர்தல்.

ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அதிமுக வினுள் பல உட்கட்சி பூசல்கள் நடந்தன.எடப்பாடி அவர்களின் தலைமையினை ஏற்க விரும்பாத கட்சியினர்கள் தினகரன் கட்சியில் இணைந்தனர். கட்சிகள் பிளவு பட்டதும் இவர்களின் பின்னடைவிற்கு முக்கிய காரணமாகும்.

தி மு க வினை பொறுத்த வரை பழம் பெரும் தலைவர் கருணாநிதி அவர்கள் இல்லாமல் நடை பெற்ற தேர்தல் இது. எனினும் மு க ஸ்டாலின்  அவர்கள் அக்கட்சியில் தலைமை பொறுப்பேற்று  வெற்றி வாய்ப்பை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றார்.

தற்போதுள்ள நிலவர படி 6 தொகுதிகள் இழுபறி நிலையில் உள்ளன. ஆ தி மு க தொகுதிகளான ஆண்டிபட்டி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில்  தி மு க முன்னிலை வகிக்கிறது.  பரமக்குடி, சூலூர் , சாத்தூர், ஆரூர் போன்ற தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைவாகவே உள்ளதால்  இழுபறி நீடிக்கிறது.  

Anitha Jegadeesan

 

 

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)