மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 August, 2020 5:16 PM IST

பார்த்தீனியம் அழிப்பு வாரத்தையொட்டி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியம் செடிகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பார்த்தீனியம் ஒரு நச்சுக்களை. இக்களைச் செடியானது,உலகம் முழுவதுமாக பரவி
பலவிதமான தீமைகளை மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படுத்துவதுடன், வேளாண்மை சாகுபடிக்கும் பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது.

இதனை அழித்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும், உழவியல் துறையில் களை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும், ஆகஸ்ட் 16 முதல் 22 - ம் தேதிவரை, பார்த்தீனியம் அழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பார்த்தீனியத்தின் தீமைகள் குறித்து, மாணவர்கள், விவசாயிகள், பண்ணைப்பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, பல்கலைக்கழக வளாகத்தின் வயல்வெளிகளில், துணை வேந்தர் முனைவர். குமார், விஞ்ஞானிகள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்களுடன் இணைந்து பார்த்தீனியச் செடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார்.

மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் பார்த்தீனியம் செடிகளைக் கண்டறிந்து அழிப்பதற்காக, பண்ணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்புக் கவசங்களையும் துணைவேந்தர் வழங்கினார்.

இதன்மூலம் இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகமானது பார்த்தீனியம் இல்லா வளாகமாக மாற உள்ளது.

மேலும் படிக்க...

இலவச மாட்டுக்கொட்டை அமைக்கும் திட்டம்! தெரியுமா உங்களுக்கு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பஞ்சகவ்யா விற்பனைக்கு! விவசாயிகள் கவனத்திற்கு!

English Summary: Tamil Nadu Agricultural University to become Parthenium-free campus!
Published on: 24 August 2020, 05:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now