மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 October, 2020 6:10 PM IST
image credit : Credit

துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்க அரசு தரப்பில் மானியம் வழங்கப்படுகிறது. இதன் படி, மின் மோட்டார் அல்லது டீசல் பம்பு செட் அமைக்க விவசாயிகளுக்கு அதன் விலையில் 50 சதவீத தொகை வழங்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி விவசாயிகள் நுண்ணீர் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்வதற்கு துணைநிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி குழாய் கிணறு, ஆள்துளை கிணறு அமைக்கவும், ஆயில் என்ஜின், மின்மோட்டார் வசதியை ஏற்படுத்தவும், பாசன நீர் குழாய்களை அமைக்கவும், தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கவும், மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

10 கோடி இலக்கு 

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு தோட்டக்கலை துறைக்கு ரூ.5 கோடியும், வேளாண்மை துறைக்கு ரூ.5 கோடியே 51 லட்சமும் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சோழமாதேவி, வேடப்பட்டி, சர்க்கார் கண்ணாடி புதூர், அக்ரகார கண்ணாடி புதூர், கொழுமம், குமரலிங்கம், சங்கராமநல்லூர், பாப்பான்குளம் கிராமங்களில் குழாய் கிணறு, ஆள்துளை கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

அனைத்து வட்டாரங்களிலும் நுண்ணீர் பாசனம் அமைத்து புதிதாக மின் மோட்டார் அல்லது டீசல் பம்பு செட் அமைக்க விவசாயிகளுக்கு அதன் விலையில் 50 சதவீத தொகை வழங்கப்படுகிறது. நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத் தொகை ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்துக்குள்ளும், தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க அதற்குச் செலவாகும் தொகையில் 50 சதவீத தொகை என நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரத்துக்குள் வழங்கப்பட்டு வருகிறது.

யாரை அணுகவேண்டும்? 

நுண்நீர் பாசன முறையை பின்பற்றும் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த மானிய உதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார, தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் - தோட்டக்கலை துறை அறிவுரை!!

இறக்குமதியை குறைக்க இந்தியாவில் அதிகளவில் பெருங்காயம் சாகுபடி - இமயமலையில் சோதனை!

English Summary: Tamil nadu agriculture department provide 50% subsidy to set up electric motor and diesel pump sets for farmers
Published on: 26 October 2020, 05:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now