News

Monday, 08 July 2019 11:31 AM

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் தமிழக எல்லையோர பகுதிகளில் ஓரளவு மழை பெய்தது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் மழை பெய்தது. எனினும் மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது வெளியிட்ட அறிக்கையில் அடுத்த 5 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

 காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்திருக்கிறது. எனவே காவேரி டெல்டா விவசாகிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருகிறார்கள். தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் பரவலாக  மழை பெய்ய இருக்கின்றன என ஆய்வு மையம் கூறியிருகிறது.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)