மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 August, 2019 12:27 PM IST

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 18-ந் தேதி சட்டசபை விதி எண் 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்து உள்ளதாகவும்,   இதன்மூலம் நகரம், கிராமம் என அனைத்து வார்டு மக்களை  நேரடியாக சென்று மனுக்களை பெற்று தீர்வு காணப்படும் என்றார். இத்திட்டமானது ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் என்னும் இடத்தில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளியில்  முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  அப்போது மக்களுக்கு சில நலத்திட்டங்களை வழங்கினார்.

அதன்படி  இந்த குறை தீர்க்கும் திட்டம் மூலம் பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு தகுதியான மனுக்களுக்கு அரசு  முன்னுரிமை கொடுத்து விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்றார். தற்போது அரசு சார்பில்  ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாசில்தார் தலைமையில் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், விவசாயிகள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்காக சிறப்பு குறை தீர்வு முகாம்களை அரசு தொடர்ந்து  நடத்தி வருகிறது. முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா, சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவை உடனுக்குடன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகர்புற வளர்ச்சி துறை என அனைத்து  துறைகளை சார்ந்த ஒரு அலுவலர் குழு, ஆகஸ்டு மாத இறுதிக்குள் நேரில் சென்று மனுக்களை பெறுவார்கள். பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். மனுக்கள் மீதான நடவடிக்கை ஒரு மாத காலத்திற்குள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழக அரசு முதுமை காரணமாக உழைக்க இயலாத  முதியோர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் மேலும்  தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார். அதேபோன்று காப்பீட்டுத் திட்டத் இல்லாதவர்கள் நேரடியாக காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர்கள் என தெரிவித்தார். 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Tamil Nadu Chief Minister Announced Pension For Old Age people
Published on: 20 August 2019, 12:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now